பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


23. இயங்கிக் கொண்டே இருப்பேன்!

நான் தீர்மானித்து விட்டேன்!
கடந்தகாலப் பிழைகளை மறந்து விட்டேன்!
புதிய எதிர்காலத்துக்கே மூச்சும் பேச்சும்!
எதை முதலில் செய்ய வேண்டுமோ
அதை முதலில் செய்வேன்!
என்வேலையை விருப்புடன் செய்வேன்!
என்மன அமைதியை
யாரும் குலைக்க இடங்கொடேன்!
சுய கட்டுப்பாட்டை இழக்க மாட்டேன்!
என்னை வளர்த்துக் கொள்வதில்
காலம் அதிகம் செலவழிப்பேன்!
மற்றவர்களை விமர்சனம் செய்யேன்
அதற்கு எனக்கு நேரமும் இல்லை!
நல்லவண்ணம் சிந்திப்பேன்!
அச்சிந்தனைக்குச் செயலுருவம் தருவேன்.
நல்லதையே எதிர்பார்த்திருப்பேன்
மனிதர்களுக்கு நண்பனாக இருப்பேன்
நல்லதுக்குப் போராடுவேன்!
நல்லவர் பக்கத்தில் இருப்பேன்! .
எப்போதும் உண்மையுடையவனாக விளங்குவேன்!
அன்பாக இருப்பேன்!
சந்திக்கும் ஏமாற்றங்களை யெல்லாம்
துரண்டு சக்தியாக ஏற்பேன்
இருள்மேகங்கள் சூழந்தாலும்
அம்மேகங்களுக் கிடையே ஒளியை நாடியே வாழ்வேன்!
சிரித்து மகிழ்ந்து வாழ்வேன்
எதிர்வரும் காலத்தை நோக்கியே வாழ்வேன்!
எப்போதும் இயங்கிக் கொண்டேயிருப்பேன்.
செய்ய வேண்டியவை என்ன?
தீர்மானம் இருக்கிறது!
அந்த முடிவுக்குக் கடின உழைப்பால்
செயலுருவம் கொடுப்பேன்!