இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
228
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இது ஒரு நாடக உலகம்!
அவரவர் வேடப் பொருத்தப்படி நடிக்க வேண்டும்!
அப்போதுதான்,
ஆரவாரமான வரவேற்புக் கிடைக்கும்!
நாடகம் பார்ப்பவர்கள் பலநாள்களுக்கு
முட்டாள்களாக இருப்பதில்லை!
ஆதலால், இன்றோ நாளையோ
போலிகள் அரங்கிலிருந்து அகற்றப் படுவர்!
வாழ்வெனும் நாடகம்
நெறிமுறைகளைக் கடந்தது;
நாடகமேடைப் புனைவுகளை அப்பட்டமாகக் கடந்த
உண்மையானது.
நாடக அரங்கின் பார்வையாளர்களான
நியாய இதயம் கொண்டவர்கள் நிலையில்
வாழ்வெனும் நாடகத்தில்
நடிப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை
நீ எப்படி இருக்கிறாய்! அப்படியே இரு!
மற்றவர்களைப் போல் நடிக்காதே!
வாழ்வெனும் நாடக மேடை
உண்மையையே ஏற்கிறது!