பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


78. ஒல்லிக்காய்!

ஞாலம் திரிதரு ஞாயிறுடன்
இந்த உலகம் முழுவதற்கும்
உறுநலம் செய்வதில்
நேர்நிற்பது நிகரற்ற அன்பே !
உருவத்தால் தேங்காய்தான்
ஆயினும் என்? உள்ளீடு இல்லாத ஒல்லிக்காய்!
அதுபோல,
உள்ளீடு இல்லாத மனிதனும்
மனிதப் பிறப்பே!
ஆயினும் முழுமனிதன் அல்ல!
மனிதனின் உள்ளத்தில் ஆர்வங்களைக் காட்டி
எண்ணற்ற நலன்களைக் கூட்டித் தந்து
கற்பனைக்கு எட்டாத ஆற்றலைத் தந்து
உடன்வந்தோ ரெல்லாம் நிற்க
நெடுந்துரரம் பயணம் செய்தான்!
படைவீரனுக்குரிய தைரியத்தோடு
அன்பு, அவதூறு, அவமானங்களைக் கடந்தும்
வெடிகுண்டுகளைத் தாங்கியும் பயணம் செய்க,
மாலை வெயிலின் இதம் சுகம்தரும்.
தூறவில் நனைதலால் கிடைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
அன்பு - நீண்டகால விளக்கு!
அன்பு - கூரிய கருவி!
அன்பின் முத்தங்கள் இனிமையானவை:
அன்பின் அனுபவகாலம் குறுகியதே!
அன்பின் மொழி அன்புடையோருக்கே விளங்கும்!
இப் பேரண்டத்தில்
அன்பின் மொழிக்கு ஈடு ஏது? இணை ஏது?