பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

339


பலவீனனுக்கு நெருக்கடிகளைத் தாங்கும்
வலிமை இல்லை; உறுதி இல்லை!
அவன் தன்னுடையதை இழக்கிறான்!
தன்னையே இழக்கிறான்!
அவனுடைய இழப்பு, உலகத்தின் இழப்பு!
நமது காலத்திற்குத் தேவை
பலமான மூளை! உயர்ந்த இதயம்!
உண்மையான நம்பிக்கை!
எப்போதும்
உழைப்புக்கு ஆயத்தமான கைகள்!
இவனே மதிப்புயர் மனிதன்!