பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கையின் திசைமாற்றும் கருவியை
எத்தனைதடவை சுற்றியும் என்ன பயன்?
உணர்விழந்தார்க்கு நெறி ஏது? புலம் ஏது? தடங்கல் ஏது?
உன் கட்டுப்பாடே உன்வாழ்வு!
உன் வாழ்க்கையின்மீது உனக்குள்ள கட்டுப்பாடு நெகிழின்
அழிவாய்! இது உறுதி!
உன்னை நீ ஆள்: உன்னை நீ வெற்றிகொள்!
அதன்பின், எண்ணற்ற வெற்றிகளைக் குவிப்பாய்!
புகழொடு வாழ்வாய்!