பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

295


பொறுப்புடன் ஏற்றுத் தீர்வு காண்க!
இப்படி நடக்குமா? அப்படி நடக்குமா? என்றெல்லாம்
ஐயப்பட்டுச்
சிக்கல்களுக்கு வரவேற்பு வழங்க வேண்டாம்!
கவலைகளுக்கு என்று நாளா இல்லை!
எந்தச் சூழ்நிலையிலும் கவலை இடம்பிடித்து விடும்!
துக்கத்தைப் புதை ஆக்கத்தைத் தேடு!
கவனம் நிறைந்த அறிவறிந்த ஆள்வினையே
வாழ்க்கையின் ஆக்கம்!