பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/339

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

327



155. மனித உருவாக்கம்

வலிமை பேணுக! மனிதனாகக் காண நிற்பாயாக!
பேணும் பெருந்தகைமைக்கு ஆணி ஆகுக!
உலகில் நிற்பாய்!
உலகம் உன்னை மனிதனாகப் போற்றும்
மனிதன், மனிதனுக்குத்தான் ஒப்பு!
மனிதன் பிறப்பால் அல்ல; வாழ்க்கையால் மனிதன்!
மனிதன் பதவிகளால் அல்ல!
மனிதன் மனத்தினால் ஆகிறான்!
தங்கம் மனிதனின் கையைக் கறைப்படுத்தாது!
பெருமை, மனிதனின் தலையைக் கனக்கச் செய்யாது;
இகழ்ச்சிகள், மனிதனின் இலட்சியப் பயணத்தைத்
தடை செய்யாது;
மனிதனின் முதுகெலும்பு
பயத்தால் முறிந்ததில்லை!
மனிதனின் இதயத்தை ஏமாற்றங்கள் அமுக்கியதில்லை!
மனிதன் இரவும் பகலும்
எங்கும் எந்தச் சூழ்நிலையிலும்
பண்பில் தலைப்பிரிதல் இல்லை!
மனிதன் குணத்தால் உருவாகிறான்
மனிதன், மனிதப் பண்புகளில் சிறந்து விளங்குகிறான்!
மனிதர்கள் பலர் தேவை!