பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


189. வாழ்க்கையின் தரம்

நம்பிக்கை வாழ்க்கையின் தரமாகும்.
நம்பிக்கையே இன்றையநாளை உரிமை ஆக்குகிறது!
நம்பிக்கையை இழப்பின் இன்றைய நாளையும்
இழக்கின்றோம்!
நம்பிக்கையின்மையைவிட வெறுஞ்சோறு இனிது!
நம்பிக்கையின்மை ஏமாற்றங்களைத் தரும்.
சிலர் வேலை செய்வர்; பிரார்த்திப்பர்
ஆனால், எதையும் எதிர்பாரார்!
நம்பிக்கை கடவுளின்பால் வைத்தால்
இன்று உண்ட உணவு செரிக்கும்!
வெள்ளங்கள், வறட்சிகள், பூச்சிகள்
இவைகளால் இழப்புக்களும் இடர்களும் ஏற்படலாம்!
மனிதன் வாழ்கிறான்!
ஆதலால், நம்பிக்கை கொள்வது இயலாதது அல்ல!
வாழ்க்கையைக் கடினமுயற்சியுடைய தாக்குக!
இதுவே வாழும் முறைமை; நல்லதூஉங்கூட!
உன்னுடைய உணவு, ஒய்வுடன்
நம்பிக்கையையும் காட்டிடின்
எது செய்தாலும் கை கூடும்!
நம்பிக்கை கொள்க! நன்றாக வாழ்க!