பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


211. நல்லதை நினை; செய்!

மற! மறந்து விடு!
நன்றல்லது அன்றே மறந்து விடு!
மனத்தில் கவலையை நீக்குக!
மனத்திலிருந்து அவலம் நிறைந்த அமைதியின்மையை
விலக்கு!
சிலரின் கொடிய செயல் உன்னைப் புண்படுத்தி
இருக்கலாம்!
அதையும் மற!
அந்தக் கொடிய செயலை நினையாதே! நினையாதே!
கொடுமையைக் குளிர்மனத்தில் நினைத்தலும் வேண்டாம்!
சிலருடைய முறை கேடான மதிப்பீடு,
உனக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கலாம்! அது
கிடக்கட்டும்!
சில கொடியவர்கள் தம் எண்ணத்தை
வெளிப்படுத்தச் செய்திருக்கிறார்கள்!
ஆனாலும், அவற்றை மறப்பது இருபாலும் மகிழ்ச்சி!
சிலர் உன்னை, உன் நண்பனிடமிருந்து பிரிக்க,
பழிதூற்றலாம்!
அதனையும் மறந்து விடு!
நல்லதை எண்ணுக! நல்லதைச் செய்க!
உன் அமைதி நிறைந்த மனத்தைப் பாதுகாத்துக் கொள்!
சந்தேகத்துடன் கூடிய பார்வை
உனது தூய அன்பைக் கெடுக்கும் அதனையும் மற! சந்தேகப் பார்வைக்கு ஈடாக நம்பிக்கையுடன் கூடிய நல்லபார்வையைத் தருக! மறந்து விடுக!