பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/415

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

403





இன்றும் நீங்கள் அமரராக வேண்டும்.
நியாயங்கள் மறுக்கப்பட மாட்டாது.
நியாயங்களும் உரிமைகளும் மறுக்கப்படமாட்டா!
நியாயங்களும் உரிமைகளும் முரண்படக் கூடாது!
இதுவே வேண்டற்பாலதாய உணர்வு!
வாயிற் கதவு திறந்திருக்கிறது!
இதயக் கதவும் திறந்திருக்கிறது!
இன்று பல்குழு நிலை!
வழக்குகளை மறந்து நீவிர் அனைவரும்
அன்னை பராசக்தி முன்னால் வரவேற்றது
நெஞ்சில் நெகிழ்வைத் தந்தது!
உரிமைகளை உறவுக்குமுன் பலியிடாதீர்கள்!
உறவுகளே உரிமைகளின் தாய்!
இன்றே போல் என்றும் வளர்க! வாழ்க!