பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/423

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

411


250. எல்லாரும் சூழ்ந்து வாழ்ந்திட
அருள்க!

நெஞ்சே! நன்னெஞ் சே!நெல் அவிந்து
அரிசியா னதுபோல் அரிசி பலபடி
பக்குவ மாகிஇட் டளியா னதுபோல்
மண்ணில் விளைந்த கிழங்குதின் பதற்கு
உரியதாய் அவிந்துநல் உணவா னதுபோல்
நீயும் நயந்தினி தே, பதப் படுக!
நலந்தரு சுற்றம் நானிலம் நல்கிடும்
நண்பர்கள் கூட்டம் பயனுற வாழ்ந்திட
நயந்தருள் செய்க!ஐம் பொறிகளும் நறுந்தேன்
சிந்து புதுமலர் போலனல் லாரும்
சூழ்ந்து வாழ்ந்திட அருள்க!
இன்றே இனிது நீ செய்க, செய்கவே!