பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடிப்பு:

அறிவும் ஆற்றலும் படைப்பதே வளமாம்!
சிவமும் சக்தியும் சேர்ந்ததே உலகம்!
அறிவறிந் தாள்வினை அமைவுடன் இயற்றுவோம்!
அன்புற் றமர்ந்து இன்புற்று வாழ்வோம்!
அருள்நலம் காப்போம்! உழுதநோன் பக (டு)என
உழைத்து வாழ்வித்து வாழ்ந்திடும் நல்லறம்
காண்போம்! மன்பதை போற்றிக் காத்திடும்
வீரம் பெறுவோம்! வளம்பல விளைப்போம்!
புண்ணியப் பொங்கல் படைத்துஇவ் வுலகினில்
வளம்பல கண்டு வாழ்வாங்கு வாழ்வோம்!
பொங்கலோ பொங்கல்! பொங்குக பொங்கல்!
நன்றி! வாழ்த்து! நானிலம் வாழ்கவே!