பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்றுஅண் ணாவின் வழியினைக் கேட்டு
நின்றிடும் தமிழக மக்களுக் கெல்லாம்
அண்ணா வின்வழி இதுவெனக் காட்ட
வந்திருக் கின்ற கவிஞர் குலமே!
நீவிர் வாழிய! நீள்புகழ் பெறுக!
அண்ணா வழியினைக் காட்டி
ஆற்றுப் படுத்துக! அழைத்துச்செல் விரே!

                கவிஞர் வீ. ம. இளங்கோவன் - அறிமுகம்

நந்தமிழ் நாட்டின் ஒருமைப்பாட் டிற்குக்
காப்பியம் செய்தளித் திட்டமாக் கவிஞர்
இளங்கோ வின்பெயர் எழிலுறக் கொண்டு
விளங்கிடும் நற்றமிழ்க் கவிஞர் இளங்கோ
அண்ணா வழியில் நாடிது என்று
காட்ட வருகிறார்! கவிதை பொழிகவே!


முடிப்பு:

கவிஞர் இளங்கோ காட்டிய நாடு
அண்ணா வழியில் அமைந்தநா டல்ல!
அண்ணா வழியில் தவறிய நாட்டையே
அவர்காட் டினார் உணர்ச்சி வசப்பட்டே!
ஆட்சிக் கட்டிவில் அமர்ந்தபின் அண்ணா
கம்ப ரசத்தினைத் தந்தஅண் ணா, ஒரு
கம்பன் விழாவில் பங்குபெற் றாங்கே
இனியசொற் பொழிவு நிகழ்த்திய போது
கம்பன் கண்ட நாடே, நாம் காண
விரும்பும் நாடென நயமாய் மொழிந்தார்!
நாடா வளத்தது வாகநம் நாட்டை
உருவாக் கிடஅவர் ஒயா துழைத்தார்!
உயர்ந்தநம் பாரத நாட்டின் ஒருமைப்