180
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
என்பது திருக்குறள், வள்ளுவர் நயமான முறையில் கடவுளைத் தொழாவிடின் கல்விக்குப் பயனில்லை என்று கூறினார். வாதவூரர் இறைவனை வணங்காதவர்கள் அறிவில்லாதவர்கள் என்று சொல்லுகின்றார்.
- "தறிசெறி களிறும் அஞ்சேன்
- தழல்விழி உழுவை அஞ்சேன்
- வெறிகமழ் சடையன் அப்பன்
- விண்ணவர் நண்ணா மாட்டாக்
- செறிதரு கழல்கள் ஏத்திச்
- சிறந்தினி திருக்க மாட்டா
- அறிவிலாதவரைக் கண்டால்
- அம்மநாம் அஞ்சு மாறே."
- "தறிசெறி களிறும் அஞ்சேன்
என்பது திருவாசகம்.
இறைவனது இணையடிகளைப் பற்றிப் பேசுதலே வினைத்துன்பத்திலிருந்து விடுபட வழி என்பதை வள்ளுவர்,
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு."
என்று கூறுகின்றார். இக்கருத்தையே மாணிக்கவாசகர்.
"ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்,
இருவினை மாமரம் வேர்பறித் தெழுந்து"
என்று கூறிகின்றார். இறைவனது திருவருட்பெருக்கு இரு வினைகளாகிய பெரு மரங்களை வேருடன் பறித்தெறிகின்றது என்பது அடிகளின் கருத்து. வள்ளுவர் வினை இரண்டும் சேராது என்று அடக்கமும் அமைதியும் நிறைந்த முறையால் கூறுகின்றார். வாதவூரர் ஆண்மையோடு வீறுகொள் உணர்ச்சியோடு,
"வல்வினையின் வாயில் பெர்டியட்டிப்
பூவல்லி கொய்யாமோ?"