பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1

கல்வியியல் கட்டுரைகள்


1. பாரதிதாசன் பல்கலைக் கழக

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

முதல் துணைவேந்தர் முனைவர் பி. சு. மணிசுந்தரம்

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் 8-9-92

அ. கல்விச் சிந்தனை

பாராட்டுதலுக்குரிய துணைவேந்தர் அவர்களே!

கல்வியியல்துறைப் பேராசிரியர்களே! அறிஞர் பெரு

மக்களே! எல்லாருக்கும் நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!


"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்"


"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை"


என்று திருவள்ளுவர் கல்வியைச் சிறப்பித்துள்ளார். கண் காணும் காட்சிகளை அறிவார்ந்த பார்வையுடன் பார்த்தால் தான் உண்மை புலனாகும். ஆக்கம் வந்தடையும். அஃதின்றேல், யாது பயன்? பயனல்லாதது மட்டுமல்ல, துன்பமும் விளையும் என்ற கருத்தில் "கண்" என்றார்