பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

161



இந்த நிகழ்ச்சிக்குப் பின் 1951 ஜூன், ஜூலைகளில் மகாசந்நிதானத்தின் திருமேனி நலம் குன்றியது. மருத்துவ மனையில் வைத்து மருத்துவம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. திருப்புத்துாரில் உள்ள ஸ்வீடிஷ் மருத்துவமனை புகழ்பெற்ற மருத்துவமனை. இந்த மருத்துவமனை அமைந்து இன்றைக்கு ஏறத்தாழ 80 ஆண்டுகளாகச் சிறந்த முறையில் மருத்துவப் பணியாற்றி வருகிறது. இந்த மருத்துவமனை தோன்றிய காலந்தொட்டு குன்றக்குடி ஆதீனத்துடன் தொடர்புடையதாக இருந்து வந்திருக்கிறது. இந்த மருத்துவ மனையிலேயே மருத்துவம் பெற்றுக்கொள்ள மகாசந்நிதானம் விரும்பினார்கள்.

மருத்துவமனையில் வைத்துப் பார்ப்பது என்ற கருத்து உருவானவுடன் ஆதீன உயர் அலுவலர்களின் ஆலோசனை நடந்தது! எதற்காக...? மகாசந்நிதானத்தை மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள யார் யாரை அனுப்பலாம் என்பதற்காக! இதற்கு அலுவலர் ஒருவரும் பணிவிடைத் தொண்டர் (Care Taker) ஒருவரும் தேவை. அலுவலராக வி. கிருஷ்ணன் என்பவரை அனுப்புவதென்று முடிவாயிற்று. பணிவிடைத் தொண்டுக்கு யாரை அனுப்புவதென்று கேள்வி பிறந்தது! அப்போதைய தலைமை எழுத்தர் ராமசாமி ஐயர் என்பவர், "சித. பேச்சிமுத்தனை அனுப்பலாம் என்றார். சித. பேச்சி முத்தன் நமக்கு அறிமுகமாகாதவர். குன்றக்குடித் திருக் கோயில் வழிவழி மரபு வயிராவி நிர்வாகம் பார்த்து வரும் தலைமுறையைச் சேர்ந்தவர்; திருவாபரணங்கள் பொறுப்பாளர்; நல்ல தோற்றமுள்ளவர். தூய்மைப்பொலிவு, அடக்கம், பணிவு என்றெல்லாம் எடுப்பிலேயே புலப்படுத்தினார். நாம் சித. பேச்சிமுத்தனிடம் மகாசந்நிதானத்தைக் கவனமாக பார்த்துக் கொள்வாயா?" என்று கேட்டோம். "உத்தரவு” என்று கூறி நம்முன் வீழ்ந்து வணங்கினார்.

மருத்துவமனையில் மகாசந்நிதானம் சேர்ந்து விட்டார்கள். ஆதீன நிர்வாகம் மருத்துவமனையிலேயே