பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பெறத் துணிவில்லை! மனச்சங்கடம். ஆதலால், உத்தரவு பெறாமலே சேலம் பயணம். காரை மடத்தை விட்டுச் சிறிது தூரம் தள்ளிக் கொண்டு போய்த்தான் ஒடச் செய்தோம்!

தார்மீகப் பொறுப்பைவிட மேடை விருப்பம் வெற்றி பெற்றுவிட்டது. இது தவறுதான்! ஆயினும் ஒரே நிலை நீடித்ததால் வந்த எதிர் விளைவு! ஆயினும், தார்மீகப் பொறுப்பு வெற்றி பெறுவது தள்ளப்படவில்லை.

சேலம் குகையில் திருக்குறட் கழகப் பொன்விழா. முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அன்று நமது தலைமை. மூன்று மணி நேரத்துக்கு மேல் பேசினோம்! பேச்சுக்கு வரவேற்பு இருந்தது! நிகழ்ச்சி இரவு பத்து மணிக்கு முடிந்தது. உடனே நெஞ்சத்தில் ஒர் ஐயுறவு, துணுக்கம்! இசைவு கொடுத்தபடி மூன்று நாள் தங்க மனம் ஒருப் படவில்லை! அறச்சங்கடம் நிறைந்த சூழ்நிலையில் இரவு பதினோரு மணிக்குக் குன்றக்குடிக்குப் பயணம். அப்போது, பிச்சைராவ் என்பவர் டிரைவராக இருந்தார். நன்றாகக் கார் ஒட்டுவார். பல ஆண்டுகள் நம்மிடம் பணி செய்தார். நம்மிடம் மட்டுமே பணி செய்தார். அவருக்கு ஒரே மகன். பெயர் ஆறுகமுகம். இவர் திருமணத்துக்குப் பிறகு தந்தை வீட்டிலேயே தங்கி விட்டார். இன்று குன்றக்குடி நேருஜி பாலிதீன் கூட்டுறவுத் தொழிற்சாலையின் முன்னோடித் தொழிலாளியாகவும் நிர்வாகக்குழுத் தலைவராகவும் ஆறுமுகம் பணி செய்து வருகிறார். இவருக்கு நிர்வாக அறிவில் வளர்ச்சி இருக்கிறது. ஆறுமுகத்தின் மகன்- பிச்சை ராவ் பேரன் கி. சிங்காரவடிவேல் வளரும் இளைஞன். இவர் நம்மிடத்தில் பணி செய்கிறார்; கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர். இவரிடம் நாமும் குன்றக்குடியும் எதிர்பார்ப்பது நிறைய என்பதை அவர் அறிதல் வேண்டும்.

விடியற்காலை நாலரை மணி, மகாசந்நிதானத்தைக் காணச் சென்றோம். நல்ல நித்திரை, சித. பேச்சிமுத்தன் அருகில் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைத்