பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

273



ஐயோ பாவம்!

ஒரு சிலருக்குப் பிறப்பின் சார்பினாலே பெருந்தன்மை பெருங்குணம் முதலியன இயல்பிலேயே அமைந்து கிடக் கின்றன. ஒரு சிலர் மேற்கூறிய நல்லியல்புகளைப் போராடிப் பெறுவார்கள். இன்னும் ஒரு சிலர் அற்பத்தனத்திலேயே பிறந்து அற்பத்தனத்திலேயே வாழ்ந்து வாழ்ந்து, அற்பத் தனத்திலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளுவார்கள். அவர்கள் சிறியவர்கள்-அற்பர்கள். அவர்களுக்கு- இக்கடை இனத்தார்க்கு நலன் தெரியாது; அவர்கள் நலன் நினைக்க மாட்டார்கள்; நலன் செய்யமாட்டார்கள். சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிக் காட்சி தருவார்கள். செயலற்று அற்பமாக ஏமாற்றியும் புறம் சொல்லியும் வாழ் வார்கள். ஆக்கத்தில் வாழத்தெரியாமல் அழிவில் ஆதாயம் எடுப்பார்கள். எரிகின்ற பிணத்தை நரி பிடுங்குவது போல, இத்தகையோர் பரிதாபத்திற்குரியவர்கள். இந்த வரிசையைச் சார்ந்த மக்களை மாணிக்கவாசகர் ஒரு சிறந்த உவமையால் விளக்குகின்றார்.

கடலில் தண்ணிர் நிறையக் கிடக்கின்றது-நாய் நிற்பதோ கடற்கரை நாய்க்கு மிகுதியான நீர்வேட்கை நாவறண்டு தொங்க அது நீரைத் தேடிக் கடற்கரைக்கு வந்தது. நிறையக் குடிக்க வேண்டும் என்ற ஆசை. தேவையும் கூட. கடலிலும் தண்ணிர் நிறைந்து கிடக்கின்றது. எனினும் அது நக்கியே குடிக்கின்றது. அது போலவே சிலர் நல்ல இடத்தில் இருப்பார்கள்-அவர்களுக்குத் தேவையும் ஆசையும்கூட நிறைய இருக்கும். எனினும், அற்பத்தனமாகவே பிழைப்பு நடத்துவார்கள்.

இறைவனுடைய திருவருளால் இந்த உலகம் இயங்கு கின்றது. அவனுடைய திருவருள் வைப்பின் காரணமாக எத்தனையோ கோடி இன்பங்கள் இந்த உலக அரங்கில் நிரம்பிக் கிடக்கின்றன. எனினும், மனிதர்கள் உழைத்து