பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கல்வி உலகத்திற்கு...

னிதன் மனித வடிவத்திலேயே பிறக்கிறான்; ஆனால் பின்னே மனிதனாக வளர்கிறான். மனிதனை முழு நிறை மனிதனாக்குவதில் கல்வியே முக்கியமான இடத்தை வகிக்கிறது. கல்வி மனிதனுக்குக் காற்றைப்போல இன்றியமையாதது. உடல், உயிர்க் கூட்டுக்குக் காற்றே களம் உயிர், ஒழுக்கத்திற் சிறக்க கல்வியே களம்.

கல்வி என்பது உயிரிடத்தில் ஒளிந்து கிடக்கும் அறிவை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகும்; அந்த அறிவிலும், ஆற்றலிலும் இயற்கையில் காணப்பெறும் குறைகளை நீக்கி நிறைவு செய்வதுமாகும். கல்வி மனிதனை அறிவுடைய வனாக்கி, ஆற்றல் உடையவனாக்கி, ஒழுக்க நெறியில் உயர்ந்தவனாக்கி முழு மனிதனாக்கும் ஆற்றல் உடையது. அத்தகைய சாதனைகளைச் செய்யும் ஒன்றுகே கல்வி என்று பெயர். இன்றோ, கல்வி இத்தகைய நலன்கள் செறிந்ததாக இல்லை. இன்றையக் கல்வி சில செய்திகளைத் தெரிந்த கொள்ளவே பயன்படுகிறது; அல்லது மூளையில் சிலவற்றை ஏற்றித் திணித்துச் சந்தர்ப்பம் வரும்பொழுது பெருமையாக ஒப்பித்துக் காட்டப் பயன்படுகிறது. இன்றையக் கல்வி அறிவுப் புலனுக்கு ஆற்றல் தருவதாக இல்லை. கல்வியின் பயனாகிய அறிவு, நம்முடைய சமுதாயத்தில் வளரவில்லை. நிறையப் படித்த பலரைக் காண்கிறோம். ஆனால் அவர்களிடத்தில் அறிவு என்பது சிறிதளவேனும் இல்லை என்பது வெளிப்படை

கல்வி பற்றித் திருக்குறள் தெளிவுறப் பேசுகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக