அறவழிகாட்டி
189
முதற்கண் அன்பை நோக்குவோம்.
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு
என்கின்றார்.
மனிதனுக்கு உயிர்நிலையாக இருப்பது எது என்பதைத் திருவள்ளுவரைத் தேடிப்போய்க் கண்டுபிடிக்க வேண்டுவ தில்லை. இந்த உயிர்நிலையைக் கானுங் கருத்தைத் தேடி எங்கும் அலைதல் வேண்டாம். வாழ்க்கையில் அன்பு இருக்கிறதா என்று பாருங்கள். அன்பின் வழிய துயிர்நிலை என்று உயிர்நிலையின் அடிப்படையைச் சொல்லுகின்ற பொழுது வள்ளுவர். இங்கனம் கூறுகின்றார்.
இனித் துய்மையை நோக்குவோம். வள்ளுவர் சொல்லுகின்றபொழுது சிலவிடங்களில் கடுமையாகச் சொல்லுகிறார். சிலவிடங்களில் எளிமையாகச் சொல்லுகிறார். சிலவிடங் களில் ஆசாரியார் முறையிற் சொல்லுகிறார். தூய்மையில்லாதவர்களை அழுத்தமாகச் சிலவிடங்களில் கண்டிருக்கிறார்.
மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற,
என்று இலக்கணம் சொல்லுகிறார். தூய்மைக்கு மாறுபட்டவர்களைக் கண்டபோது வள்ளுவருக்குக் கோபம் கடுமையாகத்தான் வருகிறது. வெகுளாமையைச் சொல்லிவைத்த வள்ளுவர் அதைக் கடைப்பிடித்தார் என்று நாம் நம்ப வில்லை. அவருக்கு இருக்கின்ற கோபம் நம்மிடத்திலேகூட இல்லை.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்