திருக்குறள் பேசுகிறது
261
அனுபவிக்க வழி நடத்துகிறார். அதுவும் நம்மீதுள்ள கருணையினாலேயாம்.
பொருந்தா உணவை உண்டவர்கள் உண்டமையின் காரணமாக விளையும் துன்பத்தினை நீக்கிக் கொள்ள முயன்று வெளியெடுக்கும் வாந்தியைப்போல, அவரவர் செய்த வினைகளின் பயன்களை அவரவர்களே முயன்று அவரவர்களே அனுபவிக்க வேண்டுமென்பதே இயற்கையின் நியதி. இங்ஙனம், விருப்பு- வெறுப்புகளுடன் செய்யும் வினைகள் அனுபவத்துக்கு வராமல் போகா, அங்ஙனம் அனுபவத்துக்கு வரும் பொழுது "ஊழ்” என்று பெயர் பெறுகிறது.
ஆர்வம் நிறைந்த முயற்சி, தளராத நெஞ்சம், நிலை கலங்காத உள்ளம் ஆகியவை ஆக்கும் ஊழாகிய ஆகூழின் அடையாளம். மாறாக, சோம்பிய உள்ளம், நெஞ்சில் நிதமும் கவலை, ஏங்கி இளைத்தல் ஆகியவை போகூழின் அடையாளம் என்று திருவள்ளுவர் அடையாளம் காட்டுகிறார்.
- ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
- போகூால் தோன்றும் மடி
என்பது குறள்.
அறிந்திருக்கும், அறிவு வேலை செய்யாது. உணர்விருந்தும் உணர்வு கைகொடுக்காது. பேதைமைத் துறையில் அழைத்துச் செல்லும் இந்தச் சூழல், இழப்பு ஊழ் மேலோங்கி இருப்பதைக் காட்டுவது. அது போலவே, ஆகும் ஊழ் மேலோங்கியிருக்கும் காலத்தில் அறிவு பெருகும்; ஆள்வினை தோன்றும். இதனை,
- பேதை படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
- ஆகலூழ் உற்றக் கடை
என்று கூறி விளக்குகிறது. குறள்.