பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நுண்ணிய நூல்கள் பல கற்றாலும், கற்ற அளவுக்கு அறிவு மிகுந்து காணாமல் ஊழின்பாற்பட்ட குறை நலம் உடைய அறிவே மேம்பட்டு நிற்கும் என்று திருக்குறள் கூறுகிறது.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்:
உண்மை யறிவே மிகும்

என்பது குறள். நூல் பல கற்றல் அறிவு பெறுதற்குரிய வழி; ஆயினும் கற்றதைச் சிந்தித்தலும் சிந்தனையில் தெளிவு பெறுதலும், துணிதலும் இயற்கையான ஊழொடு தொடர்புடைய உண்மை அறிவினாலேயே முடியும் என்பது திருக்குறள் முடிபு. ஆயினும் தன்னுாழின் தரமறிந்து ஊழின் ஆற்றலை அடக்கக் கருதி அதனின்றும் விஞ்சியதாகக் கற்றலும் கேட்டலுமுடையவர் சிறந்து விளங்குவர் என்பது குறள் கூறும் கருத்து. இந்த உலகம், இருவேறு பெரும் பிரிவுகளாக இயங்குகிறது. ஒன்று பெருஞ் செல்வமுடையதாக விளங்கும் பிரிவு. பிறிதொன்று தெரிந்து தெளிந்த அறிவுடையவராக விளங்கும் பிரிவு. இந்த இரு பிரிவுகளும் தம்முள் மாறுபட்டே இருக்கின்றன. இஃது இயற்கையும்கூட எங்ஙனம் இயற்கையாகும்? அறிவை விரும்புபவர்கள் அறிவுத் துறையிலேயே முயன்று முயன்று, ஈடுபாட்டுடன் உழைக்கின்றனர். இவர்கள் கையில் ஏதாவது கொஞ்சம் செல்வம் கிடைத்தால்கூட, அந்தச் செல்வத்தையும் அறிவுக்காகவே செலவழித்துவிடுவர். இவர்கள் செல்வத்தைப் பேணாக்கள்; அறிவையே பேணுவார்கள். இஃது ஒருவகை செல்வத்தைப் பேணும் எண்ணமுடையவர்கள், செல்வத்தையே பேணுவார்கள். சிந்தனை, செயல், தயை அனைத்தையும் செல்வத்தின் காலடியில் வீழ்த்திவிடுவர். இவர்களிடத்தில் செல்வமிருக்குமே தவிர அறிவு இருக்காது. இதனை, திருவள்ளுவர்,