பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்று கூறுகிறது. இங்கு வகுத்தான் என்று குறிப்பிடுவது கடவுளையன்று. கடவுள் பொதுவான இயல்புடையவர். ஆதலால், அவர் யாரொருவருக்கும் வலியச் சென்று தீமை செய்யார். எந்தவோர் உயிருக்கும் தீமை நிகழ்வதற்கு உடன்படமாட்டார். ஒவ்வோர் உயிரும் சிந்தன்ையால், செயலால் செய்த செயல்களே பயன் தரும் வகையில், ஊழ் எனப் பெயர் பெற்று வருவது. இந்த ஊழினை உயிர்கள் அனுபவித்துக் கழித்துத் தாமே ஏற்றிக்கொண்ட சுமையினை இறக்கிக் கொள்வதற்கு, இறைவன் துணையாக இருக்கின்றான் என்பதே உண்மை. இஃதன்றி நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் கடவுளோ ஊழோ காரணம் என்று காட்டுவது நெறியுமன்று முறையுமன்று. ஆதலால் வகுத்தான் என்பது நேரடியாக ஊழைக் குறிப்பிட்டாலும் அந்த ஊழினை உருவாக்கிக் கொண்ட மனிதனையே சாரும். இந்தக் குறளின் பொருளாவது; கோடானுகோடிப் பொருள்களைச் சேர்த்தாலும், ஊழின் வழியல்லது துய்த்து மகிழ முடியாது என்பதேயாகும். இந்தப் பிறப்பின் தொடக்க காலத்திலோ அல்லது முன்பிறப்பிலோ ஒருவன்தான் துய்த்து அனுபவித்து மகிழாமல், வயிற்றையும் வாயையும் கட்டி, செல்வத்தை விரும்பிச் சேர்த்திருப்பானாகில் அவனுடைய ஊழ் சேர்க்கும் ஊழாக உருவாகுமே தவிர, துய்த்து அனுபவிக்கும் ஊழாக வடிவம் கொள்ளாது என்பதே ஆகும். சிந்தனைச் செல்லுழிச் செயல் நிகழும். ஊழ் உருவாவதற்கு அடிப்படை சிந்தனையும் நோக்கங்களுமேயாம். செயல்கள் மட்டும் ஆகா.

நல்லூழ் இன்மையின் காரணமாக நஞ்சினும் கொடிய வறுமையினை அடைந்து துய்ப்பன - மகிழ்வன ஆகியவற்றை