திருக்குறள் பேசுகிறது
279
- சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
- பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு
என்ற குறளால் அறியலாம்.
சிறுமை தன்னையே பாராட்டிக்கொள்ளும், ஆம்; ஐயோ, பாவம்; வேறு யாரும் பாராட்ட இருந்தால்தானே! பெருமையுடையோரைப் பலர் பாராட்டுவார்கள். ஆயினும் அவர்கள் பெருமைப்படார்; தம் புகழ்கேட்க நாணுவர்; "அடியேன்” என்றும் "தாசன்” என்றும் பணிவுரை பகிர்ந்து நடப்பர்; என்றும் எப்பொழுதும் யார் மாட்டும் பணிவுடையவராகவே இருப்பர். சிறுமையுடையார் தம்மைத் தாமே வியந்து, தம்மைத் தாமே ஒப்பனை செய்துகொண்டு, தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு, ஒரோ வழி கூலி கொடுத்தும் புகழ்பெற்று, நிழற்படங்களும் எடுத்துக் கொள்வர்.
பெருமையென்பது, பிறர் போற்றித் தமக்கு அணியாக ஏற்றுக் கொள்ளுதலால், சிறப்படைகிறது; பெருமையாகிறது. சிறுமையுடையோரைப் பாராட்டி ஏற்று அணியக்கூடியது ஏதும் இல்லாததால் அணிந்து கொள்வாரும் இல்லை. இந்த ஏக்கத்தால் அவர்களே தம்மை அணிந்துகொள்வர். பித்தளையை விளக்கவேண்டும். தங்கத்தை விளக்க வேண்டிய அவசியமில்லை. பித்தளை தங்கமானால், புளியின் அவசியமும் கூடும். பெருமை கொண்டாடும் சிறுமை பித்தளை நிகர்த்தது; பெருமை சொக்கத் தங்கம் நிகர்ந்தது. இதனை,
- பணியுமாம் என்றும் பெருமை :சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
- பெருமை பெருமித மின்மை சிறுமை
- பெருமிதம் ஊர்ந்து விடல்
என்னும் குறள்களால் அறிக.