பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

41



மக்கள் அனைவரும் தூய சிந்தனை வளர்ச்சியும் செயலாற்றும் திறனும் கொண்டவர்களாகச் சிறப்புற வாழ வேண்டும்.

மனந்துரய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்துரய்மை துரவா வரும்.

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.


மனம்

நினைப்பு என்ற தொழில் இயல்பாக இருவகையானது. ஆனால் உலகியலில் ஒன்றென்றே கூறப்படுகிறது. அதாவது, ஏற்கெனவே தெரிந்த ஒன்றை மறந்து விட்டு, பின் நினைவு கூர்தலையே பெரும்பாலும் நினைவு என்று கூறுவது மரபாக இருந்து வருகிறது. நம்முடைய இலக்கிய உலகத்தின் கருத்தும் மிகுதியும் அதுவே. திருக்குறள் காமத்துப் பாலில்,

உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

(1316)

என்று ஒரு குறள் உண்டு. தலைவன், தலைவியைப் பிரிந்திருந்த காலத்தில் நினைத்திருந்ததாகத் தலைவியிடம் கூறுகிறான். தலைவி, நினைத்து நின்ற நேரம் ஒழிந்த எஞ்சிய நேரத்தில் மறந்தீரே என்று கூறி அழுகிறாள். இதன் பொருள் என்ன? மறதியைத் தொடர்ந்து நினைப்பு வருகிறது. "பால் நினைந்துட்டும் தாயினும்” என்ற மணி மொழிக்கும் இதுவே கருத்து.