பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காமமும் இடம் பெற்றன! ஐந்திணை ஒழுக்கத்திற்கு மாறாகப் பரத்தையர் ஒழுக்கம் கால்கொண்டது.

ஓரினத்திற்குள் உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் தலைகாட்டத் தொடங்கின; அவ்வழி பல்குழுத் தோற்றமும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்தலைக்கும் கொல்குறும்பும் வளரத் தொடங்கின. பொழுது விடிந்து பொழுது போனாற் போலப் பண்பாட்டை வளர்க்கும் சமயநெறிகளும் பலவா யினமையின் காரணமாகச் சமயநெறியாளர்க்கு மாறாகச் சமயக் கணக்கர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றினர்.

அவர்களும் சமுதாயத்தைப் பண்பியல் வழியில்அமைதி நெறியில் "இவர் தேவர்", "அவர் தேவர்” என்று இரண்டாட்டுகின்ற புன்நெறியை வளர்த்தனர். இங்ங்னம், புகழ் பூத்து வாழ்ந்த தமிழினத்தின் வீழ்ச்சி தலைகாட்டிய பொழுது திருவள்ளுவர் பிறந்தார்.

இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறெனத் தோன்றினார் திருவள்ளுவர். திருவள்ளுவர் என்று ஞாயிறு கனன்ற கதிரொளியே திருக்குறள். ஓரினத்தை அழிவு வராமல் பகைப்புலத்தில் காக்கும் போர் வீரனை விட வாழ்வியல் நெறியில் நயத்தக்க நாகரிகத்தினைக் கட்டிக் காப்பாற்றிய வள்ளுவர் போற்றுதற்குரியர், ஏழேழ் பிறப்பும் போற்றுதற் குரியவர்.

வடபுலம் கண்டு ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வாகை, கொண்ட வெற்றியைவிட, செந்தமிழ்ப் பேராசன் திருவள்ளுவர் புகழ் போற்றுதற்குரியது. ஆரியப் படை கடந்த செழியனின் வெற்றி ஒரு பொழுதே பகையைத் தடுத்தது. நாவலர் வள்ளுவர் வெற்றி, ஊழி ஊழிக்காலத் திற்கும் வெற்றி கொண்டது.

நெடுஞ்செழியனின் வெற்றி பகையை மட்டுமே தடுத்தது. பண்பினை வளர்க்கப் பயன்படவில்லை. திருவள்ளுவர் செய்த திருக்குறளோ நந்தமிழ் நெறியினை