பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
தமிழமுது

1. வள்ளுவம் ஏன் பிறந்தது?

தமிழினம் காலத்தால் மூத்த இனம்; நிலவுலகத்தை மூடியிருந்த நீர்ப்பரப்பு மறைந்து, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி வீரத்தில் மட்டுமன்று, சிந்தனைத் திறத்திலும் சிந்தனையைச் செப்பும் மொழித் திறத்திலும், இலக்கியப் படைப்பாற்றலிலும் இலக்கியத்தின் பயனாகிய நனி நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இனம், தமிழினம். செல்வச் செழிப்பும் இருந்தது. அதனால், காலப்போக்கில் மதோன்மத்தமான வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிட்டனர். கள்ளும், காமமும் இடம் பெற்றன. ஐந்திணை ஒழுக்கத்திற்குப் பதில் பரத்தையர் ஒழுக்கம் கால்கொண்டது. ஓரினத்திற்குள் உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் தலைகாட்டத் தொடங்கின. அவ்வழி, பல்குழுத் தோற்றமும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் வளரத் தொடங்கின. பொழுது விடிந்தால் பொழுது போனாற் போலப் பண்பாட்டை வளர்க்கும் சமய நெறிகளும் பல

தி.16.