பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/368

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆடுகின்ற துருப்புச் சீட்டு என்று நினைக்கிறார்களா என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

நமது வாக்காளர்கள் தம்தம் மனப்போக்கில் அல்லது குழு மனப்போக்கில் அல்லது இயக்குகிறவர்களின் மனப் போக்கில் வாக்களிக்கிறார்கள் என்று தெரியவருகிறது. வாக்காளர்களில் பல கோடிப் பேர்கள் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொன்னால்கூடத் தவறில்லை என்று தோன்றுகிறது. இனிய செல்வ, ஆம்! கோபம்தான்! ஏன் கோபம்!

எந்த ஒரு அணியையும் ஆட்சியில் அமரக்கூடிய பெரும்பான்மை தந்து நிலையான ஆட்சி ஏற்பட வாக்களிப்புச் செய்யாதது முதற் குற்றம்! பத்துப் பேர்களுக்கிடையில் தனித்து நின்று தனிப் பெரும்பான்மையாக வந்துள்ள காங்கிரஸ் கட்சியை சற்றேறக்குறைய 1, 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சியைப் பார்த்து, 100, 80, 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனித் தனியாகப் பெற்றுள்ள கட்சிகள் ஆர்ப்பரிக்கின்றன. மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டார்கள் என்று! இது உண்மையல்ல. மக்கள் எல்லாக்கட்சிகளையுமே நிராகரித் திருக்கிறார்கள் என்பதே உண்மை. 1984 இல் காங்கிரசுக்கு மிகமிகப் பெரும்பான்மையைத் தந்திருந்தார்கள். அதனால் காங்கிரஸ் ஆட்சிப் போக்கில் சறுக்கியது! மதச்சார்பின்மையை 2-ஆம் நிலைக்குத் தள்ளியது! ஜனநாயக நடை முறைகள் கட்சியிலும் ஆட்சியிலும் அருகிப் போயின. இங்ஙனம் ஏற்பட்ட வழுக்கல்களைச் சரி செய்யலாம் என்று கருதி மிக மிகப் பெரும்பான்மையைக் குறைக்க வாக்காளர்கள் எண்ணியிருக்கலாம். ஆயினும் பிடியைக் கொஞ்சம் கூடுதலாக இறுக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவுதான் நடந்தது! எதிர்த்து நின்றவர்களுக்கு ‘இராமபிரானின் திருவருளும்’ கிடைத்தது என்று 'தினமணி’ கூறுகிறது.