பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/444

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, நம் நாடு வளர்ந்த நாடுகள் வரிசையில் நிற்க விரும்பினால் நாம் நாட்டின் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடுத்து இரண்டாவது இடந்தான் மற்றவைகளுக்கு என்று சொல்ல வேண்டும். இனிய செல்வ, எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதனை இரண்டாந்தரத்திற்குத் தள்ளக்கூடாது. அதுபோலவே எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடமிருந்து அந்நியனாகக் கூடாது. மனித உலகத்தை அரித்துத் தின்னும் என்புருக்கி நோய் ஆக இருக்கும் இந்நோயை அறவே எதிர்த்துப் போராடவேண்டும்.

இனிய செல்வ, இன்றிருக்கும் நிலை தொடர்ந்தால் 2001-ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? எண்ணிப்பார்! எழுதுக!

இன்ப அன்பு
அடிகளார்
69. கவரிமான்

இனிய செல்வ,

கவரிமான் என்று மான் வகையில் ஒரு சாதி. இந்த கவரிமான் காடுகளில் ஓடித் திரிந்து வாழும். அப்படி ஓடித் திரிந்து வாழும் அந்தக் கவரிமான் ஒரு வேலியைத் தாண்டும்பொழுது வேலியில் கவரிமான் உடம்பிலுள்ள ரோமம் ஒன்று உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் பொறுத்துக் கொள்ளாதாம்! உடனே செத்துப் போகும் என்று திருக்குறள் கூறுகிறது.

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்”

(969)

என்பது திருக்குறள்.

இனிய செல்வ, நமது நாட்டில் நடந்த பங்குச் சந்தை ஊழல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய்! செய்தித் தாள்களிலும் படித்திருப்பாய்! பங்குச் சந்தை (Share Market) என்பது நமது