பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



177


அதற்கு நமக்குப் பொறுமை கிடையாது, தாங்குகிற சக்தி நமக்குக் கிடையாது.

ஆனால் நாட்டிலே, நிலத்திலே, சுரங்கங்களிலே, மலைகளிலே, காடுகளிலே விளைகின்ற ஏராளமான செல்வங்களை, பத்துப் பேர் சாப்பிடக்கூடியவற்றை ஒரு ஆள் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டால், “அவன் கொடுத்து வைத்தவன்” என்று சொல்லுகிறார்கள்.

இதே ஆட்கள்-சுண்டலுக்கு மனம் வருந்தியவர்கள், ஏராளமான நாட்டினுடைய இயற்கைச் செல்வங்கள் முறையாக விநியோகப்படாமல், முறையாகப் பகிர்ந்து கொடுக்கப்படாமல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற இயல்புக்கு ஏற்பச் செய்யப்படாமல் அவை எங்கோ சென்று குவிவதைப் பார்த்தால், அதை ஏன் என்று கேட்கத் தைரியம் கொள்ளமாட்டார்கள். தைரியம் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம், ஏதோ கடவுள் ஒரு நீதியை ஏற்படுத்திவிட்டான் என்ற ஒரு பாறைக்கல், ஒரு சுமை நம் மூளைமீது ஏற்றப்பட்டிருப்பதால் நாம் அதைத் தட்டிக் கேட்பதற்கு அச்சப்படுகின்றோம்.

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.’

1062

என்று வள்ளுவர் குரல் கொடுக்கிறார்.

ஆக, திருவள்ளுவர் காத்தலுக்குப் பிறகு ‘வகுத்தலும் வல்லது அரசு’ என்று சொன்னார்.

ஆக, ஒரு பொருளியல் என்று சொன்னால், அது எப்படி இருக்கவேண்டும்; ஒரு அரசு பொருளை எப்படி நிர்வாகம் செய்யவேண்டும் என்பதை மிகத் தெளிவாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதிய வழிப் பொருளியல், பொருள் ஈட்டல், பொருளைப் பாதுகாத்தல்,

தி.ΙV.12.