பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிறப்புக் கிடைத்ததோ அதைக்கூடத் துய்க்க முடியாமல் போகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், உயிர்களது இன்பத்திற்கு இடையூறாக இருந்தால் அவன் கடவுள் பணிக்குக் குறுக்கே நிற்கிறான் என்று ஒருவன் சொன்னான்.

உயிர்களுடைய இன்பத்திற்கு இடையூறாக நின்றால்-உயிர்களுக்கு இன்பத்திற்கு மாறாகத் துன்பத்தைத் தருவானேயானால் அவன் எல்லாம் வல்ல கடவுளுக்கே குறுக்கே நிற்கிறவனாம்.

கடவுள் இந்த வாழ்க்கையை அவனுக்குக் கொடுத்தது, அவன், மேலும் நல்ல அனுபவங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காக அதில் இவன் போய்க் குறுக்கே நின்று தடை செய்கிறான்.

ஆக, நம்முடைய குறிக்கோள், திருவள்ளுவர் கருத்துப்படி பிணியின்மையாகும். நோயைக் கண்டால் துாரப் போ! நோயின்றி வாழ வேண்டும். சிலருக்கு நோய் வந்து விட்டால், ‘போன ஜென்மத்தில் செய்த பாபம், வந்து விட்டது’ என்று சொல்லுவார்கள். போன ஜென்மத்தில் என்ன செய்துவிட்டோம் என்கிற கவலை ஒரு பொது வியாதியாகப் போய்விட்டது.

இந்தக் கவலையைத்தான் “நெஞ்சிற் கவலை நித்தம் பயிராக்கி” என்றான் பாரதி.

நெஞ்சிற் கவலையால் சில பேர் வாழ்க்கை செம்மை இல்லாமல் இருக்கிறது.

“என்னங்க செளக்யமா?” என்று கேட்டால், “என்னமோ, இருக்கிறேன்!” என்று சொல்லுகிறபோது செத்து விடுவான் போலத் தெரிகிறது.