பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



207



அவன் மகிழ்ந்து, சிரித்து, கன்னம் எல்லாம் பூரிக்க அவன் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. காரணம், அவன் வாழ்க்கையில் அல்லல்படுகிறான்.

நான் காரிலே சென்றுகொண்டிருக்கும்பொழுது, ஒரு மனிதன் தூக்க முடியாத சுமையை வண்டியில் வைத்து இழுத்துக்கொண்டு இருக்கிறான். அதை ஒரு மனிதன் தலையை முட்டுக் கொடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தான்.

அதை என்னுடைய கார் டிரைவர் அவசரமாக முந்திக் கொண்டு முன்னே போவதற்குப் பார்த்தார். ‘அவன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறான். அவனை முந்திக் கொண்டு போக எண்ணலாமா? இது நியாயமா? என்று என் டிரைவரிடம் கேட்டுவிட்டு, ‘அவனைப் போக விடு’ என்று சொன்னேன். ஆனால் பார்த்தபிறகு, அவன் ஒன்றும் ஆன்ம ஞானத்திற்குப் போக முடியாது. அவன் திருவாசகம், தேவாரம் படிக்க முடியாது. திருக்குறள் படிக்க முடியாது.

ஆன்ம அநுபவம் போயிற்று. வெற்று வயிற்றுச் சோற்றுக்காக உடம்பை இப்படி நாறாகப் பிழிகிறான். இதை நம் நாட்டிலே பார்த்துக்கொண்டு மனச்சான்று இல்லாமல் இருக்கிறோம்.

திருவள்ளுவருக்கு 2000 ஆண்டு வரப்போகிறது. இந்த, ஆள் இழுக்கிற கொடுமையையாவது இந்த ஈராயிரம் ஆண்டு நினைவாக, தமிழக அரசு தன்னுடைய அரசின் எல்லையில் ஒழித்துவிட வேண்டும்.

உழைப்பை அதிகமாகச் செலவழிக்காமல் இருக்க, சைக்கிள், மோட்டார் போன்ற நவீன இயந்திரங்களைக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு நாள்பூராவும் இழுத்துக்கொண்டு அலுத்து, சலித்து வீட்டிற்குப் போகும் அவனிடம் சாமி கும்பிடு என்றால் எப்படிக் கும்பிடுவான்?