பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



233



இப்பொழுது சிறிது ‘நாகரிகமாக நினை’ என்று சொல்ல முயற்சி செய்து பார்க்கலாம். அந்தக் காலத்தில் அவனுடைய வாழ்க்கைச் சூழல் அப்படி சிலபேர் கள் குடிக்கும் சாமியாகவே கடவுளை நினைத்துப் பார்த்திருக்கிறார்கள்! அவன் கள் குடிக்கிறான்; அதனால் கள் குடிக்கும் சாமியாக இருந்தால் தேவலாம் என்று நினைக்கிறான். அவனுடைய கற்பனையை அவனாலே தட்ட முடியவில்லை, பாவம்! இவரும் வந்து கள்ளையும் குடித்து விட்டு, ஒரு தண்டாவையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் பாவம்! இப்பொழுது நாம் கற்பனையை வேறு மாதிரி செய்து, இப்படிச் செய்தாலும் கடவுள் வருவார் என்று நாம் நம்பிக்கை தர வேண்டும். அந்த நம்பிக்கை கொடுப்பதற்கு உயர்ந்த ஜாதியினர், உயர்ந்த சமூகத்தினர் வர மாட்டேன் என்கிறார்கள்.

எனவே ‘இது அவனது திருவுரு’ என்று சொல்வது போல, ‘இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்’ என்று எழுதிக் காட்டுவதைப் போல, எழுதிக் காட்ட முடியாத கடவுள் இவன் என்ன நினைக்கிறானோ, அந்த வடிவத்தோடு வந்து சேருகிறான். அந்த வடிவங்கள் எல்லாம் மனிதன் நினைப்பதற்கும், ஆர்வத்திற்கும், கற்பனைக்கும் ஏற்றவாறு கடவுள் எடுத்துக் கொண்டனவே தவிர, அது இவனுடைய படைப்பும் அல்ல.

ஆக, இரண்டு பேரும் சேர்ந்து செய்த ஒரு காரியம். அந்த ‘இதயத் தாமரையிலே இறைவனை எழுந்தருளச் செய்த பிறகு, அவனுடைய ஒளியை நீ வேண்டிய அளவு தூண்டிக்கொள்’. இது திருநாவுக்கரசருடைய தேவாரம்; விளக்கை ஏற்றினால் மட்டும் போதாது. அது ஒளியை வேண்டிய அளவு தரும் வரை தூண்டி விட்டுக் கொள்ள வேண்டும். பெருமான் நம்முடைய நெஞ்சத்திலே வந்துவிட்டால் மட்டும் போதாது. அவனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிற வாழ்க்கை முறை தேவை. அதனால்தான்,