366
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
எவ்வெவரிடத்து எந்தப் பொருளைக் கேட்டாலும், அப்பொருளின் மெய்த் தன்மையை அறிந்து கொள்வதே அறிவு.
பொருள்
சொல்பவர் எவ்வளவு பெரியவரானாலும் சிறியவரானாலும், பகைவரானாலும் நண்பரானாலும் அவர் கூறியவற்றை நன்கு ஆய்ந்து தெரிந்து மெய்த்தன்மையைக் கண்டு கொள்ளுதலே அறிவு.
48. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
அறிவுடையார் ஆக வேண்டியதை அறிந்து செயல்படுவர்; அறிவில்லாதவர் அதனை அறிய மாட்டார்கள்.
பொருள்
எதிர்காலத்தை அறிந்து தொழிற்படுதல் அறிவுடைமை.
49. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
நாடாளும் மன்னன் தன் குற்றத்தை முன்னதாக நீக்கிப் பின்னர் மற்றவர் குற்றத்தைக் காண்பனாயின் அரசனுக்கு ஏது குற்றம்?
பொருள்
மன்னனிடமுள்ள குற்றத்தின் வழியே மக்களிடத்துக் குற்றம் கால் கொள்கிறது. மன்னன் குற்றம் நீங்கிய வழி மக்களிடத்துக் குற்றம் நில்லாது.
50. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.