372
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பொருள்
ஊக்கம் உள்ளவழி, பொருளுண்டாம். ஊக்கமில்லாத வழி, பொருளுடைமை ஓர் உடைமையே அன்று.
66. மடிமடிக் கொண்டாழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தள்ளினும் முந்து.
சோம்பலை ஒழிக்காமல் அதனைக் கொண்டொழுகுவோன் அறிவற்றவன். அவன் கெடுவதற்கு முன்பே அவன் பிறந்த குடியும் கெடும்.
பொருள்
சோம்பல் அஃது உடையவனை மட்டுமின்றி, அவனது குடியையும் கெடுக்கும் தன்மை வாய்ந்தது.
67. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
எந்த ஒரு செயலையும் செய்து முடித்தற்கு அரிய தென்று கருதித் தளர்ச்சியடையக் கூடாது. அச்செயலை முடித்தற்குரிய முயற்சி பெருமையைத் தரும்.
பொருள்
அருமையான முயற்சிகளை மேற்கொள்ளுதல் பெருமை தரும்.
68. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.
துன்பம் வரும்பொழுது கலங்காமல் நகுதல் வேண்டும்; அங்ஙனம் நகுதலே, அத்துன்பத்தை எதிர்த்து வெற்றி கொள்ளுதற்குரிய சிறந்த வழி.