பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

117



பெண்கள் தம் நிலை இழந்துவிட்டனர்; போகப் பொருளாக மட்டுமே இருக்கும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டு விட்டனர்; இந்த இழிநிலைக்குச் சோழநாடு தள்ளப்பட்ட தனால்தானே நடுச்சந்தியில் மாதவி ஏலம் கூவி விற்கப்படுகிறாள்!

கோவலன், மாதவியிடத்திலேயே தங்கிவிட்டதை இடித்துக்கூறி, இல்லத்திற்கு அழைத்துவரும் பெண்கள் யாரையுமே காணோம்! கோவலனின் தாயும்கூட அப்படித் தான்! ஐயோ பாவம்! இரங்கத்தக்க நிலை! கண்ணகியின் தோழிகூட, கண்ணகியைக் காமவேள் கோட்டம் தொழ அழைக்கிறாளே தவிர, கோவலனை அழைத்து வரும் வாய்ப்பில்லை! இந்த அளவுக்குப் பெண்ணுலகு தரம் தாழ்த்தப்பட்டுவிட்டது.

மதுரையில் மட்டும் என்ன? பாண்டியன் அவைக் களம் ! அத்தாணி மண்டபம் ! பாண்டியன் அரசு இருக்கையில் அமர்ந்திருக்கிறான்! ஆடல் மகள் ஆடுகிறாள்! அரசன், ஆடலில் ஒன்றிக் கலந்து அனுபவிக்கிறான்! அரசிருக்கையில் உடனிருந்த பாண்டிமாதேவிக்குத் தாங்க முடியவில்லை! ஆனால் என்ன செய்கிறாள்: ஆடலை நிறுத்த அவளால் இயலவில்லை; இயலாத நிலை! அரசியானாலும் பெண்தானே!

ஆதலால், பாண்டிமா தேவிக்குத் தலைவலி வருகிறது! இல்லை! தலைவலி வந்திருப்பதாகச் சொல்லிப் பிரிகிறாள்! அந்தப் புரத்திற்குச் செல்கிறாள்! இதுதான் பாண்டியநாட்டு நிலை! இத்தகு பெண்டிர், பெண்டிர் அல்லர். போகப் பதுமைகள்! அணிகலன்களின் சுமை தாங்கிகள்! அவ்வளவு தான்!

இதனால்தான் கண்ணகி; “பெண்டிரும் உண்டு கொல்! பெண்டிரும் உண்டு கொல்!” என்று கேட்கிறாள்! அது