பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


-வதும், பேசுவதும் இயற்கையாயினும் பாரத நாட்டிற்குத் தந்துள்ள அளவுக்கு, சிறப்பைத் தமிழ்நாடு என்று பிரித்து எண்ணும்போது தமிழகத்திற்குப் பாரதி தரவில்லை.

பெயர், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்ற பத்தினையும் வைத்துச் சிறப்பித்துப் பாடுவது தன்னேரில்லாத் தலைவனுக்கே ஆகும். இப்பத்தும் சேர்ந்தது தசாங்கம் என்பதும், அது தன்னேரில்லாத் தலைவனுக்கே உரியதாக வேண்டும் என்பதும் தசாங்கத்தின் இலக்கணம் ஆகும். அந்தத் தசாங்கத்தின் இலக்கணத்தை மனத்தில் இருத்திப் பார்க்கும்போது பாரதி பாரதநாட்டுக்குத் தான் தசாங்கம் பாடியுள்ளானே தவிர தமிழ் நாட்டிற்குப் பாடவில்லை. வீட்டிலே சிற்றன்னைகள் பலர் இருப்பினும் பெரிய அன்னைக்கு உரிய மதிப்பை, அப்பெரிய அன்னைக்கும் ஏனைய சிற்றன்னைக்குரிய மதிப்பிற்குறைவு படாது. சிற்றன்னையருக்கும் கொடுப்பதுபோல, பாரதக் குடும்பத்தில் பெரிய அன்னையாகிய பாரதத் தாய்க்குத் தரும் மதிப்பை, மற்ற தமிழ், தெலுங்கு, குஜராத்தி, வங்காள அன்னையருக்குத் தருவதனைக் காட்டிலும் சற்று அதிகமாகத்தர எண்ணியே தமிழ்த்தாய்க்குப் பாடாத தசாங்கத்தைப் பாரதத் தாய்க்குப் பாடியுள்ளான். அதில் அவன் நாடாக,


"பேரிமய வெற்புமுதல்
பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றேஅறி”

என்று தன்னாட்டின் எல்லைகளாக இமயத்தையும், குமரி முனையையும் காட்டுகின்றான்.

பாப்பாவுக்குக் கூறும்போது பாரதி தமிழ் நாட்டை மிகவும் வற்புறுத்துகிறான்.

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்று கூறுகிறான். அப்பாட்டின்