பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலக மகனாகவும் கை கொடுத்து நின்றான். எனவே சிறு எல்லைகட்கு உட்பட்ட மொழிவழித் தனித்து வாழும் தேசீயங்களை ஏற்றுக் கொண்டவனல்லன் பாரதி.

மொழிவழித் தனித்தும் பிரிந்து வாழும் தேசீயத்தை ஏற்றுக் கொண்டவனல்லன் என்றால் தன் மொழியையும், தன் இனத்தையும் பேணாதவன் என்று பொருளல்ல. எடுத்துக் காட்டாகப் பல்வேறு சிற்றாறுகள் இன்றிப் பேராறு இல்லை; பேராற்றுடன் கலவாத சிற்றாறுகளால் பெரும் பயன் இல்லை. பேராறுதான் சிறப்புடையது; சிற்றாறுகள் சிறப்புடையனவல்ல என்று ஒதுக்கித்தள்ளவும் முடியாது. பேராற்றின் மூலம் வாழ்வுக்குத் தேவையான சிறப்பு, சக்தி, மின்சாரம் போன்ற பெருஞ் சக்திகளைப் பெற முடியும். ஆகவே பேராறுபோல பாரத தேசீயம்; சிற்றாறுகள் போல பிறமொழி வழித் தேசியங்கள். பாரதி தமிழ்நாட்டையும் பார்த்தான். பாரத நாட்டையும் பார்த்தான். ஆனால் பாரத நாட்டினின்று பிரிந்த தமிழ்நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன், அகில உலக தேசியத்தை விட்டுப் பிரிந்து நிற்கும் பாரத தேசீயத்தையும் ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு அவன் உயர்ந்திருந்தான் - தன்னை வளர்த்துக் கொண்டிருந்தான்.

இங்கனம் பாரத தேசீயத்தைக் காணும் அளவுக்கு அவன் வளர்ந்திருந்ததாலேயே காவிரியாறு போல் பிறிதில்லை. வேங்கடம்போல் பிறிதில்லை என்று பாடாது,


"இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாரே".
"மன்னும் இமயமலை எங்கள் மலையே"

{{block_center|<poem>

</poem>}}

என்று பாடுகின்றான். இங்கனம் பரந்துபட்ட பாரத தேசியத்தைக் கண்டதால்தான் தமிழ்நாட்டு மணமகனுக்குச் சேரநாட்டுப் பெண் வேண்டும் என்கிறான். தமிழர் தமிழ் பெண்ணை மாத்திரம் மணந்துகொண்டு தமிழ்நாட்டுக் குள்ளேயே "குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டக் கூடாது" என்கிறான். மணமகளும் மணமகனும் நீர்விளையாடச்