பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

193


வேறுபட்ட கொள்கைகளின் அடிப்படையிலும் ஒற்றுமை காணாது - காண முயற்சிக்காது, அக்கொள்கை உடையவனைக் குறைத்துப் பேசுவது தவறு என்று கண்டிக்கும் பாரதியின் தேசியப் பாடல் வேண்டாமா?


"இனி ஒரு விதி செய்வோம்-அதை
எந்தநாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்"


பசிப் பிரச்சனை இன்றைய நிலையில் ஒரு நாட்டு பிரச்சனையாக மட்டுமல்லாது உலகப் பிரச்சனையாகவும் ஆகிவிட்டது. "ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பேர் சோறின்றி உலகில் இறந்து போகிறார்கள்” என்று அமெரிக்காவில் கூடிய அகில உலக உணவு மாநாட்டு அறிக்கை கூறுகிறது. ஒன்று அனைவர்க்கும் சோறு போடவேண்டும்; இன்றேல் பாரதிக் கருத்துப்படி உலகத்தை அழிக்க வேண்டும்-செய்தோமா? உள்ளத்துணர்வைத் துரண்டி, உண்பதை மறைக்காதே, உதவி வாழ் என்பதைக் கற்றுத்தரும் அப்பாடல் வேண்டாமா? அவனவன் உண்டு வாழ்வது அவனவன் விதி என்பதை மாற்றிப் புது விதி வகுக்கச் சொன்ன அப்பாடல் வேண்டாமா? வீர மன்னன் சிவாஜியின் மொழியில் வைத்துப் பாரதி கூறும் சொற்சொற்கள், எல்லையில் சீனர் தரும் தொல்லைகளை ஓட்டப் பாடுபட்டுக்கொண்டு வரும் நமக்கு, நல்லுணர்வு ஊட்டுவனவாய் உள்ளன. சிவாஜியின் சொற்களை அப்படியே இன்று பயன்படுத்தின் சீனர்களது படையெடுப்புக்காகப் பாரதியே வந்து பாடியதைப் போல மிளிர்கின்றன. அவை.

"வானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்
இந்நாள் படைகொணர்ந்து இன்னல் செய்கின்றார்"