பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பதில் பல துன்பங்களையே செய்து வருகிறது என்று பாரதி வருந்துகிறான்.

பல புதிய அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து, பாரத சுதந்திரப் போர் வீரர்களைச் சிறையில் பிடித்து வைக்கின்றனர். ஆயினும், பாரதப் புதல்வர்கள் பயப்படாமல் தைரியமாகத் துன்பத்தை ஏற்று அனுபவித்து வருகிறார்கள்.

சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைத் துன்புறுத்துவதும் காலப் போக்கில் கதிரவனை நோக்கி வீசிய கல், வீசியவர் தலையில் வீழ்வது போல் ஆள்வோருக்கே துன்பமாக முடியும் என்று பாரதி எச்சரிக்கை செய்கிறான்.

பாரத நாட்டின் சுதந்திர மீட்சி பாரத நாட்டின் சராசரி மனிதக் கூட்டத்தினாலேயே நடைபெறும் என்பதும் பாரதியின் கருத்து; நம்பிக்கை! பாரத நாட்டின் விடுதலைப் போருக்கு, பரம்பொருளின் ஆதரவுண்டு என்றும் நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி!

ஆனால், பரம்பொருளின் ஆதரவு பெற ஒரு நிபந்தனையையும் பாரதி விதிக்கத் தவறவில்லை. அது என்ன நிபந்தனை? "பாரதப் புத்திரர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களைக் கட்டிச் சுருட்டி வீட்டிற்குள் வைத்துவிட்டு, தேச மாதாவின் சேவையில் தொண்டு பூண்டு வந்தால் கட்டாயமாக பகவான் அருள் தருவான்” என்பதே அந்த நிபந்தனை; நம்பிக்கை!

பாரத நாட்டு மக்களிடம் வேற்றுமைகள் பெருகி வளர்ந்தமையை, திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுவதை நமது நாட்டு மக்கள் சென்ற காலத்தில் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏன்? இன்று வரையிலும் உணர்ந்து ஒழுக முன்வரவில்லை என்பது உண்மை.

ஆயினும் வேற்றுமைகள் மறக்கப்படுதல் வேண்டும்: ஒன்றுபடுதல் வேண்டும், அனைவரும் நாட்டுக்கு உழைக்க