பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12
பாரதியின் தேசியப் பாடல்கள்


எட்டையப்புர மண்ணிலே பிறந்து வளர்ந்து பாரத நாட்டிற்காக இந்த உலகச் சமுதாயத்துக்காக வாழ்ந்தவன் பாரதி. தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டுக் கிடந்ததாம் ஒர் பாரத தேசந்தனைத் தன் பாட்டுத் திறத்தாலே பாலித்தவன் பாரதி. சுதந்திரப் போராட்ட இயக்கம் வளரசமுதாயத்தின் விடுதலை உணர்ச்சி பீறிட்டு எழ-சமுதாயம் விடுதலை வேட்கை கொள்ள அவன் பாடிய பாடல்கள்தேசியப் பாடல்கள் இன்றைய நிலையில் காலங்கடந் தவையா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனது இம்முன்னுரையை வெறும் செய்திகளை மட்டும் தரும் செய்திப் பத்திரிகை அளவில் அமைத்துச் சொல்கிறேன். அதுதான் தலைமைக்கு ஏற்றது. இரு கட்சிகளின் சார்பிலும் ஒத்த தகுதியுடையவர்கள்-திறமுடன் வாதிடக்கூடியவர்கள் அமைந்துள்ளனர்.

கட்சியாளர்களது கருத்துகளை ஏற்றும் விளக்கியும், விடையிறுக்கப் பெறாத வினாக்களுக்கு ஏற்ற விடை தந்தும் பாரதியின் தேசியப் பாடல்கள் காலங் கடந்தவை எனச் சிலர் விவாதிக்கிறார்கள்.