பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் தேசியப் பாடல்கள்

281




"சிந்துநதியின் மிசை நிலவினிலே
சேரதன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிகள் ஒட்டிவிளை யாடிவருவோம்”

என்ற பாடலில் குறிப்பிட்ட சிந்துநதி பாகிஸ்தானுக்குப் போய்விட்ட பிறகு இந்தப் பாடலுக்கு வேலை ஏது? இது காலங்கடந்த பாடல் அல்லவா என்கின்றனர்.

"இப்பாடல் நடைமுறைக்கு ஒவ்வாதது” என்ற அவர்கள் கருத்து, சரியானதுதானா? அன்றை நிலையில் ஒன்றுபட்டு நில்லாது பிரிந்துபோன பாகிஸ்தான் இப்போது சீனாவுடன் உறவாடுவதால் தனக்குத் தீங்கு நேர்வதை-நேர இருப்பதை நினைத்து ஏன் இந்தியாவுடன் இணைந்து நிற்க நினைக்கக் கூடாது? நாடுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு விலகுவதும் பின் ஒன்றுபட்ட கொள்கையால்-பிறர் நெருக்கடியால் இணைவதும் இயற்கைதானே? அம்முறையில் நேற்றுப் பிரிந்த பாகிஸ்தான் நாளை-எதிர்காலத்தில் இந்தியாவுடன் சேராது-சேரக் கூடாது என்று எப்படிக் கூற முடியும்? அன்று சிந்துவையும் கங்கையையும் இணைக்க முடியாதா? இருநாடுகளும் ஒன்று சேர்ந்து கைகோத்து நிற்கும் நிலை ஏற்பட்டால் அத்தகைய சிறப்பு வேறு எந்த நாட்டுக்கு வரும்? சிந்து நதியில் படகோட்டும் இந்த நோக்கம் அன்று நிறைவேறத்தானே செய்யும்? சிந்து நதிக் காலத்தின் கோளாறால்-ஆட்சியால் பிரிந்தது. காலம் மாறும்போதுஇந்தியா பாகிஸ்தான் இணையும்போது நனவாகும். இன்றைய எண்ணமல்லவா அது? இரு நாடுகளும் இணையும் அத்தகைய நிலை எதிர்காலத்தில் வரும்-வரத்தான் போகிறது.


"என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம்
என்று மடியும் இந்த அடிமையில் மோகம்"