பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/332

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மறுப்புகளும் தோன்றலாயின. இதுவே மதங்களைப் பற்றிய வரலாறு.

பாவேந்தன் பாரதிதாசன் மதங்களை எதிர்த்தான் அதுவும்கூடத் தொடக்க காலத்தில் இல்லை என்பதை "எதிர்பாராத முத்தம்" என்ற காப்பியம் குமரகுருபரைப் பற்றி விவரிக்கும் நூல் குறிக்கும் பாவேந்தன்.

"கடவுள் வெறி சமயநெறி
கன்னல் நிகர் தமிழுக்கு
நோயே! நோயே!”

என்று கூறுவதால் கடவுள் வெறியை, சமயநெறியை மறுக்கிறான் என்பதே உண்மை.

மதம் கடவுட் கொள்கையை மையமாகக் கொண்டு மனிதகுல மேம்பாட்டுக்காகத் தோன்றியது. மதம் காலப் போக்கில் தடம் புரண்டுவிட்டது. கடவுளை மறந்த மதங்கள் கூடத் தோன்றிவிட்டன. ஒரே கடவுள் என்று மதங்கள் கூறுவது உண்மையானால் மதச் சண்டைகள் வருவானேன்? வழிகளைப் பற்றிச் சண்டை போட்டுக் கொண்டு அடைய வேண்டுவதை இழப்பது பைத்தியக்காரத் தனமல்லவா? பாவேந்தன் பாரதிதாசன் மதங்களுக்கிடையில் வேற்றுமை பாராட்டுவதை விரும்பவில்லை. கடவுள் பெயரால் எழுதப்பட்ட பொய்ம்மைக் கதைகளை ஒப்பாமல் மறுக்கிறான். நம்மையும் மறுக்கும்படி தூண்டுகிறான். தமிழ்நாட்டில் வாழும் ஏசுமதத்தினர், முஸ்லீம்கள், இந்துக்கள் அனைவரும் தமிழர். பிறப்பால் திராவிடர் என்பதைத் தமிழக மக்கள் உணர வேண்டும். இந்த மதத்தினரைக் கூட்டி, ஆரியத்தைப் பாதுகாத்துத் திராவிடர்களை - தமிழர்களைத் தாழ்த்தும் சூழ்ச்சியில் முன்னணிகள் ஈடுபடும் முயற்சி இன்று நடைபெறுகிறது. விழிப்பாக இருங்கள். எல்லோரும் தொழுவது ஒரு கடவுளையே.