356
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இன்மையும் அதன் விளைவாகிய தற்சார்புமே பயத்திற்குக் காரணம். பாஞ்சாலிக்கு அநீதி இழைத்த பொழுதும் சமூகம் விழித்து எழவில்லை என்பதுதானே உண்மை! அன்று மட்டுமன்று. இன்று மட்டும் என்ன வாழ்கிறது? பாவேந்தன் பாரதிதாசன்,
- "ஒரு தீமை கண்டால்
- ஒதுங்கி நிற்றல் தீமை"
- "ஒரு தீமை கண்டால்
(குடும்ப விளக்கு - பக். 66)
என்று கூறும் அறிவுரை தமிழர் வாழ்வாக மலர்தல் வேண்டும்.
- "இழுக்கொன்று
- காணில் நமக்கென்ன
- என்னாமல் கண்டஅதன்
- ஆணிவேர் கல்லி
- அழகுலகைப் - பேணுவதில்
- நேருற்ற துன்பமெலாம் இன்பம்"
(குடும்ப விளக்கு - பக். 66)
என்பான் பாரதிதாசன். சமூக நியதிக்காகத் துன்பமுறுதலும் இன்பமே என்பது பாவேந்தனின் பண்பான அறிவுரை.
நல்லறம் நாடுக
இன்றைய சமுதாயத்தில் தன்னலம் - பொதுநலம் என்று அடிக்கடி பேசப்படுகிறது. இவ்விரண்டில் பொது நலமே உயர்ந்தது. பொதுநலத்தில் தன்னலம் அடங்கும்; ஆனால் தன்னலத்தில் பொதுநலம் அடங்காது. ஆதலால், பொதுநலம் போற்றுதலுக்குரியது. வழி வழி வந்த தமிழ் மரபு பொதுநலம் சார்ந்தேயாம். தமிழ்த் தலைமகன் பொருளிட்ட விரும்புவதுகூடப் பொதுநலத் துண்டுதலிலேயே என்று அகநானூறு கூறும்.