பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வுடைமை ஏற்காது. உழைப்பவனுக்குரிய பங்கைக் கொடுக் காமல் திருடுவதை பாரதி கண்டிக்கின்றான்.

"பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்கின்றான் பாரதி. இன்னமும் மானுட சாதியில் உழைப்புக்குரிய கூலியை, உழைப்பை வாங்குவோனே நிர்ணயிக்கின்றான்; உழைப்பாளி நிர்ணயிப்பதில்லை. கூலிநிர்ணயிப்பு, உழைக்கும் சந்தையின் மலிவு அல்லது கிராக்கி அடிப்படையிலும், உழைக்கும் நேர அளவிலுமே கணக்கிடப்படுகிறது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் தடை செய்வதில் வேலையில்லாத் திண்டாட்டமும் கணிசமான பங்கை வகிக்கிறது. உழைத்து உற்பத்தி செய்த பொருளின் மதிப்பீட்டு அடிப்படையில் கூலி நிர்ணயம் செய்யும் நியாயப் புத்தி இன்னமும் வந்தபாடில்லை. ஆயிரக் கணக்கான உழைப்பாளர்கள் கடுமையாக உழைத்துப் பொருள்களை உற்பத்தி செய்து குவிக்கின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை செழிக்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு: உழைப்பவன் ஏழையாக இருப்பது கலியுகத்தின் அடை யாளம்; இலக்கணம்; உழைப்பவன் உரிய பங்கை அடைந்து செழித்து வாழ்வது கிருதயுகத்தின் அடையாளம். இதனை பாரதி தெளிவாக்குகின்றான்.

பாரதி, கலியுகத்திலும் கிருதயுகத்திலும் ஒருசேரக் காலூன்றி நிற்கின்றான். "கலியுகத்தில் எல்லாவற்றையும் மந்திரம் செய்யும்" என்று கற்றுக் கொடுத்த மந்திரத்தை மறந்தானில்லை. ஆனாலும் மந்திரத்தை மட்டும் நம்பி மதிமோசம் போகவுமில்லை. இஃது ஒர் யுக சந்திப்பு.

"மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்:
வானையளப் போம். கடல் மீனையளப்போம்;
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்;
சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்."

(பாரத தேசம்- 1)

என்று பாடுகின்றான்.