பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
திருவாசக உவமைகள்

இரைதேர் கொக்கு

ஆற்றங்கரைகளிலும் - குளத்தங்கரைகளிலும் கொக்கு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கும். பரபரப்பின்றி - தவம் செய்வது போல உட்கார்ந்து கொண்டிருக்கும். ஏன்? இரையை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. கொக்குக்கு இரை மீன்! அம்மீன்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கரையில்தான் அது உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. ஏன் ஓடுகிற மீன் குஞ்சுகளை-மீன்களைப் பிடிக்கக் கூடாதா? பிடிக்கலாம்; தடையில்லை. ஆனால், வயிற்றுக்குப் போதுமானதாக-திரும்பத் திரும்பப் பிடிக்க வேண்டிய அவசியமில்லாதபடி ஒரே முயற்சியில் பிடித்து உண்ணும் அளவிற்குப் பெரிய மீன் வரும்வரைக் காத்திருக்கின்றது. இந்தக் காட்சியும் கொக்கின் வாழ்க்கை முறையும் கவராத கவிஞர்கள் கிடையா? மாணிக்கவாசகரும் இந்தக் காட்சியில் - வாழ்க்கையில் கவர்ச்சிக்கப்பட்டுள்ளார். தாமும் இரைதேர் கொக்குபோல வாழ்ந்ததாகக் கூறுகிறார்.

உயிருக்கு இரை இறைவனின் திருவருளேயாம். உடற்பசிக்கு எடுக்கும் இரை-மீண்டும் மீண்டும் பசியைத்