பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


பாட்டும் பொருளும்


‘பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும்...’ என்பது குமரகுருபரர் வாக்கு. “பாட்டின் பொருள்” என்றால் குறிப்புரை. பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை என்றே பெருவழக்காகப் பொருள் கொள்ளப் பெறுகிறது. பொருள் என்ற சொல் வேறு பொருள் நோக்கிலும் வழங்கப் பெற்று வருகிறது.

“தம்பொருள் என்பதம் மக்கள்” என்று திருக்குறளில் வருவதும்...“யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல...” என்று பரிபாடலில் வருவதும் நினைவிற்குரியன. தமிழ் இலக்கியங்கள் பெரும்பான்மையும் கணிதை வடிவத்திலேயே அமைந்தவை. இந்த இலக்கியங்களுக்குப் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தெளிவுரை ஆகியன காணும் முயற்சியில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. பொது மறையாகிய திருக்குறளுக்குப் பற்பல உரைகள் வெளிவந்துள்ளன. ஆயினும் திருக்குறளின் நோக்கமாகிய மெய்ப் பொருள் உரைத்தல் நடைபெறவில்லை. செம்பொருள் காணும் அறிவும் கண்டோமில்லை. அருள் நூல்களாகிய திரு முறைகளுக்கு உரையெழுதுவது மரபன்று என்ற காரணத்தால் எழுதப் பெறவில்லை.