பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12


நினைந்தூட்டும் தாயினும்....


திருவாசகத்திலுள்ள பாடல்கள் அனைத்தையும் உற்று நோக்க வேண்டும். ஒவ்வொரு பாடலும் அரும்பெரும் கருத்துக்களை அள்ளித்தரும் சிறப்புடன் மிளிர்வனவாகும்.

பல்வேறு தன்மைகளைக் கொண்ட தாய்மார்களை உலகில் காணலாம். குழந்தை பசியால் அழுவதற்கு முன் காலமறிந்து பாலூட்டும் தாய்-அழுகுரல் கேட்டபின் பாலூட்டும் தாய்-அழுது ஓய்ந்தபின் பாலூட்டும் தாய் இம்மூவரிலும் பசிநேரமறிந்து பாலூட்டும் தாயேத் தலையாயவள். அத்தகைய தாயைக்காட்டிலும் பேரன்புக் கொண்டவன் இறைவன். எனவேதான் ‘இறைவனைப் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தவனா’கக் கூறுகின்றார்.

தாயின் பால் உடலை-ஊனை-அதாவது ஆணவத் - தடிப்பை வளர்ப்பதாகும். ஆணவத் தடிப்பையுடையவன் இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாக முடியாது. இறைவனின் திருவருட்பாலோ ஆணவத் தடிப்பை-ஊனை. உருக்குவதோடு மட்டுமின்றி உள்ளொளியை-அருளைப் பெருக்கவல்லது. எனவேதான் இறைவனைத் தாயினும் சாலப் பரிந்தவனாகக் குறிப்பிடுகின்றார்.