பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/374

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அருள்பாலித்தமையை ‘அந்தணனாவதும் காட்டி’ என்று கூறி உணர்த்துகின்றார்.

இத்திருப்பாடலால் இறைவன் எல்லாருக்கும் முன்னேயுள்ள மூத்தவனானாலும், முதல்-நடுவாக விளங்கினாலும், மூவரால் அறிய முடியாத விழுப்பொருளானாலும் அவன் எளிவந்த கருணையோடு நமது உள்ளமாகிய பழங்குடில் தோறும் எழுந்தருளிச் செந்தண்மை காட்டி, ஆட்கொண்ட, பள்ளியெழுந்தருள்கின்றான். நமது இல்லங்களில் எழுந்தருளியுள்ள இறைவனை இழக்காமல் ஏத்திப் போற்றுவோமாக!

விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேலிரும் படியார்
எண்ணகத் தாயுல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

9

இன்று பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல் இறைவன் கருணையினால் மண்ணில் எழுந்தருளி ஆட்கொளும் திறன் வாழ்த்தப்படுகிறது.

“விண்ணோரும் சென்று அடைய வொண்ணாத செம்பொருளே! உன்னுடைய தொண்டாற்றும் அடியோங்கள் மணனுலகத்தே வாழ, மண்ணக்கத்தே எழுந்தருளிச் செய்தவனே! திருப் பெருந்துறை யுடையவனே! வழிவழித் தொண்டராகிய எங்கள் கண்ணிற் பாவையே! அகத்தே களிதரு தேனாய்க் களிப்பு அளிப்பவனே! விண்ணவர்க்குக் கடலமுதம் ஆனவனே! அருமருந்தே! கரும்பே! அன்பால் விரும்புகின்ற அடியவர்கள் நினைவில் உள்ளவனே! உயிர்களுக்கு உயிரே! தலைவனே! திருப்பள்ளி யெழுந்தருள்க!”