பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அழுதும் ஊட்டாத தாயரும் உண்டு. அழுகுரல் கேட்டு ஊட்டும் தாயரும் உண்டு. நினைந்தூட்டும் தாய்மை சிறந்தது. இறைவனாகிய தாய் அவளினும் சிறந்தவனாம்! எப்படி? நினைப்பு, மறதியைத் தொடர்ந்து வருவது. மறதியின்றேல் நினைத்தல் ஏது? நினைந்தூட்டும் தாய் என்றதாலேயே அவள் மறந்திருந்தாள் என்பது பெறப்படுகின்றது.

இறைவனாகிய தாய்க்கு மறதியில்லை. அதனால் நினைவு கூர்தலும் இல்லை. இறைவன், உயிர்களை மறப்பானாயின் ஏது உயிர்ப்பு? ஏது உலகம்? ஆதலால், இறைவன் உயிர்களை மறப்பதும் இல்லை; நினைப்பதும் இல்லை; ஆனால் அறியாமை வயப்பட்ட உயிர்கள் இறைவன் மறந்து விட்டான் போல எண்ணிப் புலம்புகின்றன. இல்லை; அவ்வுயிர்களை அவை அறியாமல் தொடர்ந்து வருகின்றான்.

அவன்றவன் கருணையினால் ஊன்பொதி தசையினை உருகும் உடலாக மாற்றுகிறான். ஆன்மாவில் ஞான விளக்கினை ஏற்றி ஒளி உண்டாக்குகிறான். ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து அற்புதம் செய்கின்றான். இந்த அற்புதத்தினை, அனுபவத்தினை உயிர்கள் இழக்காமல் துய்த்து மகிழப் புறம் புறம் திரிந்து பாதுகாக்கின்றான்.

உலகியலில் பெரியோர் முன்செல்வர், அருளியலில் உயிர்களே முன் செல்லும், இறைவன் பின்னே வருவான். ஏன்? முன்னே செல்லும் உயிர்கள் இடறி விழுந்தால் எடுத்தாள வேண்டுமல்லவா? அதனால் அவன் உயிர்களின் பின்னே வருகின்றான் இல்லை! அவன் பித்துப் பிடித்து. உயிர்களின் பின்னே திரிகின்றான்.

அவன் உயிர்களை ஆட்கொண்டருளித் திரிவதற்கு யாது பொருள்? யாது குறிக்கோள்? ஒன்றுமே இல்லை! “குறியொன்றும் இல்லாக் கூத்து” என்று திருவாசகம் பேசும்.

இங்ஙனம் வண்ணப் பணித்து வாவென்று வான் கருணை பொழிந்திடும் அண்ணலை நினைந்து